குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து அரங்கேற்றுதல், நுழைவுச் சீட்டு விலையைக் குறைத்தல் உள்ளிட்ட முறைகளில், பெள ச்சி நகரின் இசை நாடக அரங்கு, அதிகமான ச்சின் ச்சியாங் ஆர்வலர்களை வளர்த்துள்ளது. இதனிடையே, அடிமட்ட பொது மக்களின் பண்பாட்டுத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, ஆண்டுதோறும் இவ்விசை நாடக குழுவினர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று இதனை அரங்கேற்றுகின்றனர். கிராமப்புறங்களில் அரங்கேற்ற நிலைமை மிகவும் கடினமானது. அரங்கேற்ற இடம் பெரும்பாலும் தற்காலிக மேடையாகும். ஆனால், இசை நாடகத்தை அரங்கேற்றுவோரின் பேரார்வம் அதிகம். 25 வயதான இளம் அரங்கேற்ற உறுப்பினர் லீ டாவ் ச்சின் ச்சியாங் கலையை நேசிக்கின்றார். தற்போது அவரது வருமானம் குறைவாக இருந்த போதிலும், அவரது கனவை நனவாக்க பாடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"ஒரு முறை நாங்கள் அரங்கேற்றிக் கொண்டிருந்த போது, கடும் காற்று வீசியது. பல அரங்கேற்ற சாதனங்கள் காற்றில் பறந்து விட்டன. மேடையை ஒழுங்காக்கிய பிறகு தொடர்ந்து அரங்கேற்றினோம்" என்றார் அவர்.