ஓர் எதேச்சையான வாய்ப்பு காரணமாக, முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு, மக்களின் கண் முன் மீண்டும் வளர தொடங்கியது. துர்சுன் கூறியதாவது:
"சீனாவின் சின்ச்சியாங்கில், ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடைய முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற கைவினை கலைஞர் இருக்கின்றார் என்பதை அமெரிக்க ஸ்மிசோ நாட்டுப்புற வாழ்க்கை மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வ மையம் 2002ஆம் ஆண்டு அறிய வந்தது. அந்த மையம், என் தந்தையோடு தொடர்பு கொண்டது. அந்த மையத்தின் அழைப்பின் பேரில், என் தந்தை அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற கலை விழாவில் பங்கெடுத்து, முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு நுட்பத்தைக் காட்சிக்கு வைத்தார். அவ்விடத்தில், மக்களின் ஆரவார கைத்தட்டல் ஒலி நீண்டநேரம் நீடித்தது" என்றார் அவர்.