2012ஆம் ஆண்டு மார்ச் திங்கள், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேச அரசின் ஏற்பாட்டுடன், சீன ஓவியம்-முசுக்கொட்டை மரத்தாள் ஓவியக் கலை கருத்தரங்கு பெய்சிங் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. சீனாவின் நிபுணர்களும், அறிஞர்களும் ஆக 20 பேர், முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பின் தற்போதைய நிலை, அதன் உயிராற்றல், பயன்பாடு, கலைத் தன்மை முதலியவை பற்றி விவாதித்தனர். 2012ஆம் ஆண்டு ஜூலை திங்கள், மொ யூ மாவட்டத்தின் முதலாவது முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு நுட்பப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. முதியவர் Tuo Hu Ti Ba Ke மாணவர்களுக்கு ஒவ்வொரு தயாரிப்பு செய்முறையையும் சொல்லிக்கொடுத்தார். மூலப் பொருட்களின் வினியோகத்துக்கு உத்தரவாதம் செய்யும் பொருட்டு, முசுக்கொட்டை மரங்களைப் பயிரிட Pu Qia Ke Qi வட்ட அரசு 2012ஆம் ஆண்டு 2 ஹெக்டர் விளைநிலத்தை வழங்கியது. தற்போது, இவ்வட்டத்தின் முசுக்கொட்டை மரத்தாள் பண்பாட்டு வீதியில், முசுக்கொட்டை மரத்தாட்களைத் தயாரிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, 18ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, முசுக்கொட்டை மரத்தாள், ஒருவகை பழமை வாய்ந்த தாளாக மட்டுமே பார்க்கப்படவில்லை. சீனப் பண்பாட்டின் ஒரு பகுதியாக, முசுக் கொட்டை மரத்தாள் தயாரிப்புக்கு மேலும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு.
நேயர்களே, "உய்கூர் இனத்தின் முசுக்கொட்டை மரத்தாள் தயாரிப்பு நுட்பம்" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.