கடந்த ஆயிரம் ஆண்டுக்காலத்தில், து லோங் இனத்தின் சமூகத்தில் ஆதிகால சமூகத்தின் இறுதிக் காலக்கட்ட தனிச்சிறப்பு அப்படியே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, து லோங் இனக் கிராமங்கள், செங்குத்தான ஆற்றுப்பள்ளத்தாக்கில் நிறுவப்பட்டுள்ளன. து லோங் இனத்தின் மர வீடுகள், மலையடியிலும், ஆற்றிற்கு அருகிலும் கட்டப்பட்டவை. வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, நீரோட்டம், வீடுகளின் கீழ்ப் பகுதி வழியாக தான் ஓடும். து லோங் இனத்தின் மொழி, ஹான்-திபெத் மொழி குடும்பத்தின் திபெத்-மியன்மார் மொழி பிரிவைச் சேர்ந்தது. இவ்வினத்தின் மொழிக்கு எழுத்துக்கள் இல்லை. இவ்வின வரலாறு, மர வேலைப்பாடுகள், முடிச்சிகள், கதைகள், நாட்டுப்புறப்பாடல்கள் ஆகியவை வாய்வழிலாக பரவியவை.
து லோங் இனத்தவர், பாடல்கள் பாடுவதை மிகவும் விரும்புகின்றனர். பல காவியங்கள், செவிவழி கதைகள், நாட்டுப்புற பாடல்கள் அனைத்து பாடுகிற வடிவம் மூலம், தலைமுறை தலைமுறையாக பரவி வருகின்றன. அறுவடை, வேட்டையாடித் திரும்புதல், வீடுகளைக் கட்டுதல், திருமணம், விழா கொண்டாட்டம் முதலிய நிலைமையில், இவ்வினத்தவர் ஆடல் பாடல் வடிவத்தில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுகின்றனர். து லோங் சியாங் ஆற்றுப் பிரதேசத்துக்கும், வெளியுலகத்திற்குமிடையே தொடர்பு துண்டிக்கப்படுவதால், து லோங் சியாங் ஆற்றுப் பிரதேசம், சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் ஒன்றாகும். வெளியுலக மக்களைப் பொறுத்த வரை, து லோங் இன நாட்டுப்புறப் பாடல்கள் மிகவும் அரிதானவை.