• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:சீனாவின் து லோங் இன நாட்டுப்புறப்பாடல்கள்
  2013-05-21 08:53:37  cri எழுத்தின் அளவு:  A A A   
 

நீங்கள் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது, குங் ஷான் மாவட்டத்தின் பிங்ச்சுங்லோ வட்டத்தைச் சேர்ந்தவர் யிரியா பாடும் து லோங் இனத்தின் பழமை வாய்ந்த காவியமாகும். உலகத்தை உருவாக்குதல் இக்காவியத்தின் தலைப்பு ஆகும். செழிப்பான கற்பனைகளும் அற்புதமான செழிவழி கதைகளும் இக்காவியத்தைப் பாடுவதன் மூலம் வெளிப்படுகிறது. யாங் யுவான் ஜி கூறியதாவது:

"இந்த காவியத்தில் சுமார் 700 சொற்றொடகள் இடம்பெறுகின்றன. மனித குலத்தின் ஆரம்பம், மனிதருக்கும், பேய்க்குமிடை போராட்டம், வெள்ளப்பெருக்கு, கடவுளுக்கு பலியிடுதல், திருமணம் செய்தல், விழாவின் ஆரம்பம் ஆகிய அம்சங்கள் இக்காவியத்தில் இடம்பெறுகின்றன. இந்த காவியம் உண்மையில் து லோங் இனத்தின் கருவூலமாகும். இந்த காவியத்தைக் கேட்டால், இவ்வினத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040