Lan Xue Hong உள்ளூர் கிராமவாசியாவார். Chen Yun Huaவின் மூங்கில் பின்னல் கலைக் குழுவில் சேர்ந்தது, அவரது குடும்ப நிலைமையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய தெரிவாக அமைந்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன், அவர் வெளியூரில் வேலை செய்தார். 2007ஆம் ஆண்டு அவர் ஊர் திரும்பிய பிறகு, மூங்கில் பின்னல் கலையைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். அவர் கூறியதாவது:
"40 முதல் 50 வயதான மக்கள் வெளியூரில் வேலை செய்வதில் பல இன்னல்கள் நிலவுகின்றன. எனவே இந்த வயதுடையோர் அவரவர் வீட்டில் மூங்கில் பொருட்களைப் பின்னுகின்றனர். மூங்கில் பின்னல் கலை, உள்ளூர் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தூண்டியுள்ளது" என்றார் அவர்.