இவ்வாண்டின் விளக்கு திருவிழாவின்போது, சிச்சுவான் மாநிலத்தின் செங்துக்கான பல்வேறு நாடுகளின் தூதாண்மை அலுவலர்கள் சின்ஷென் மாவட்டத்துக்குச் சென்று, இத்திருவிழாவைக் கூட்டாக கொண்டாடி மகிழ்ந்தனர். மூங்கில் பின்னல் அருங்காட்சியகத்தில், அவர்கள் தலைசிறந்த மூங்கில் பின்னல் பொருட்களைக் கண்ட பிறகு, இந்த அருங்காட்சியகத்தின் பணியாளர்களிடமிருந்து பின்னல் திறனை பேரார்வத்துடன் கற்றுக்கொண்டனர். இந்தியாவைச் சேர்ந்த மோலி என்னும் பெண்மணி இரண்டு மீன்களை விரைவாக பின்னினார். அவர் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, மகிழ்ச்சியுடன் கூறியதாவது:
"மூங்கிலால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களைக் காண்பது இதுவே முதன்முறை. இவை சிறப்பு மிக்கவை" என்றார் அவர்.