அருங்காட்சியகத்திலிருந்து வெளியேறியப் பின், மூங்கில் பின்னல் கலை மண்டலத்தில் உள்ள திறந்த வெளியில், படத்தை வரைந்து கொண்டிருந்த ஹூ சு ரோங்கைச் செய்தியாளர் கண்டார். சின்னஞ்சிறு மூங்கில் இழைகளை கொண்டு அவர் பின்னிக் கொண்டிருந்தார். அவருக்கு வயது 45. ஒரு எளிய வரைப்படத்தின்படி, நாளுக்கு எட்டு மணி நேர பின்னினால், மூங்கில் கலைப் பொருள் ஒன்றைப் பின்னி முடிக்க, ஒரு திங்கள் தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். மூங்கில் பின்னல் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டால், அதிக வருமானம் சம்பாதிக்க முடியும். இக்கிராமத்தில் பல பெண்கள் மூங்கில் பின்னல் கலை மண்டலத்தில் வேலை செய்கின்றனர்.
மூங்கில் பின்னலுக்கு, சிறப்பு கருவிகள் பெரிதாக தேவைப்படாது. ஆனால் தலைசிறந்த வரைபடம், கலையழகு மிகுந்த கைவினைத் திறன் மற்றும் பொறுமை தேவைப்படுகின்றன. சின்னஞ்சிறு மூங்கில் இழைகள் ஹூ சு ரோங் உள்ளிட்ட பின்னல் திறமைசாலிகளின் கைகளால், தலைசிறந்த கலைப் பொருட்களாக மாறியுள்ளன. ஹூ சு ரோங் இப்பணியை மிகவும் நேசிக்கிறார். அவர் கூறியதாவது:
"மூங்கில் பின்னல் பணியாளர்களில், 98 விழுக்காட்டினர் பெண்களாக இருக்கின்றனர். ஆண்கள் குறைவு. பெண்கள் கவனத்துடன் பின்னல் வேலையில் ஈடுபடுகின்றனர். மூங்கில் பின்னலை மிகவும் நேசிக்கிறேன்" என்றார் அவர்.