சின்ஷென் மக்கள், மூங்கில் பின்னல் பொருட்களில் கலை நயம், கண்களைக் கவரும் அழகு, பயன் ஆகியவைகளை வெளிப்படுத்துகிறார்கள். இக்கலைப் பொருட்கள், பாரம்பரிய கைவினை திறன், மூங்கிலின் தனிச்சிறப்பு, பண்பாடு, நுண்கலை ஆகியவற்றின் தலைசிறந்த சங்கமமாகும். மூங்கில் பின்னல் பொருட்களில் வாழ்க்கை மீதான சின்ஷென் மக்களின் பேரார்வமும், அக்கறையும் வெளிப்படுத்தப்படுகின்றன. சின்ஷென் மக்கள் மூங்கில் பொருட்களை பின்னுவதில் மகிழ்ச்சியடைகின்றனர். மூத்த மூங்கில் பின்னல் கலைஞர் ச்சாங் பெள செங் கூறியதாவது:
"மூங்கில் பின்னல் கலைஞர்கள் ஒரு பெரிய குடும்பத்தை உருவாக்கியுள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கின்றனர். அனைவரும் இணக்கமாக பழகி, மகிழ்ச்சியாக வேலை செய்து வருகின்றனர்" என்றார் அவர்.
மக்களின் வாழ்க்கையும், உண்மையில் ஒரு வகை கலையாகவே பார்க்கப்படுகிறது.
நேயர்களே, "சிச்சுவான் மாநிலத்தின் சின்ஷென் மூங்கில் பின்னல் கலை" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "சீனப் பண்பாடு" நிகழ்ச்சி நிறைவுறுகிறது.