பண்டைய குவெய் சோ, குவெய் வணிகர்கள் தொழில் துறையை வளர்க்க துவங்கும் இடம் ஆகும். மிங் மற்றும் சிங் வம்சக்காலத்தில், குவெய் வணிகர்கள், வணிகத் துறையில் மிக முக்கிய இடம் வகித்தனர். பழமை வாய்ந்த வரலாறு, தனிச்சிறப்பு மிக்க குவெய் வணிகர்கள் குழு ஆகியவை காரணமாக, குவெய் சோவில் சிறந்த செழிப்பான நாட்டுப்புறப் பண்பாடு தோன்றியது. குவெய் சோவின் செதுக்கல் கலை, குவெய் சோ பண்பாட்டின் தலைசிறந்த மாதிரியாகும்.
குவெய் சோவின் செதுக்கல் கலை, குவெய் சோவின் பண்டை காலம் நீண்டக்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிட அலங்கார முறையாகும். சுமார் 700 ஆண்டுகால வரலாறுடையது. செதுக்கியிருக்கும் படங்களை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, சின் அன் ஓவியர் பிரிவின் ஓவிய முறை பயன்படுத்தப்பட்டுள்ளதை உணரலாம். அதன் மூலம் செதுக்கல் கலைப்பொருட்கள் கலையழகு வாய்ந்தவை. புடைப்பு வடிவ மற்றும் வட்ட வடிவ செதுக்கல் வேலைப்பாடுகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் உட்புறம் வெற்றிடமாக வெளியே செதுக்கல் புடைத்திருக்கும் பயன் கிடைத்தது. கூடார மண்டபம், இயற்கைக் காட்சிகள், மனிதர்கள், விலங்குகள், மலர்கள், பறவைகள், பூச்சிகள், மீன்கள் ஆகியவை இந்த செதுக்கல் வேலைப்பாடுகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. உண்மைக்கு ஒத்தது போன்றிருக்கு இந்த உருவங்கள் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.