20 நாடுகள் குழுவின் 8வது உச்சி மாநாடு உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 5ஆம் நாள் பிற்பகல் ரஷியாவின் சென்ட் பீர்ஸ்பெர்க் நகரில் துவங்கவுள்ளது. இவ்வுச்சி மாநாடு துவங்குவதை முன்னிட்டு, சீன துணை நிதி அமைச்சர் ச்சு குவாங் யாவ் சீன மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். சீனா தமது பொருளாதாரப் பிரச்சினையை செவ்வனே தீர்ப்பதன்மூலம், உலகப் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்களித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
"பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும்" என்பது நடப்பு உச்சி மாநாட்டின் தலைப்பாகும். ச்சு குவாங் யாவ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், உலகப் பொருளாதாரம் பல உறுதியற்ற காரணிகளை இன்னும் எதிர்நோக்குகின்றது என்றும், இத்தகைய பின்னணியில் 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டை நடத்துவது, பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.
1 2