• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி-20 உச்சிமாநாடு: சீன நிதித் துறை துணை அமைச்சரின் பேட்டி
  2013-09-05 12:46:17  cri எழுத்தின் அளவு:  A A A   

அளவு சார்ந்த தளர்ச்சியான நாணயக் கொள்கையிலிருந்து அமெரிக்கா விடுபடக்கூடும். இதனால் ஏற்படும் அச்சுறுத்தலைத் தவிர, ஐரோப்பிய நாடுகளில் கடன் நெருக்கடியின் பாதிப்பு இன்னும் நிலவுகின்றது. புதிதாக வளர்ந்து வரும் நாடுகளும், சில புதிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன என்று ச்சு குவாங் யாவ் சுட்டிக்காட்டினார். உலகப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் முக்கியப் பிரச்சினைகளில், சீனாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. தன் பிரச்சினையை செவ்வனே தீர்க்க வேண்டும் என்பது தான் இந்நிலைப்பாடாகும் என்றும் ச்சு குவாங் யாவ் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீனாவின் பொருளாதாரக் கட்டமைப்புச் சீர்திருத்தத்தை ஆழமாக விரைவுபடுத்தி, சீனாவின் பொருளாதார அதிகரிப்பின் தரத்தை உயர்த்த வேண்டும். இதன் மூலம், சீனப் பொருளாதாரம் தொடர்ச்சியாகவும், சீராகவும் வளர்வதற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும்" என்றார் அவர்.

20 நாடுகள் குழுவின் பேச்சுவார்த்தை கட்டமைப்பை, வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிலைப்பாட்டை ஒருங்கிணைக்கும் முக்கிய மேடையாக சீனா கருதுகிறது. வழமை போல, இவ்வுச்சி மாநாடு துவங்குவதற்கு முன் பிரிக்ஸ் நாடுகள் கூட்டம் நடத்தி, முக்கிய அரசியல் பிரச்சினைகள், 20 நாடுகள் குழுவின் நிலைப்பாட்டு ஒருங்கிணைப்பு, பிரிக்ஸ் நாடுகளின் அமைப்பு முறை ஒத்துழைப்பு முதலியவை பற்றி விவாதிக்கின்றன. இந்த ஒருங்கிணைப்பு அமைப்பு முறை, 20 நாடுகள் குழு அமைப்பு முறையில் புதிதாக வளர்ந்து வரும் நாடுகளின் கருத்து வெளிப்பாட்டுரிமை மற்றும் செல்வாக்கை உயர்த்துவதற்கு துணை புரியும் என்று ச்சு குவாங் யாவ் தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040