• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
20 நாடுகள் குழுவின் 8வது உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவரின் உரை
  2013-09-06 10:50:28  cri எழுத்தின் அளவு:  A A A   

20 நாடுகள் குழுவின் 8வது உச்சி மாநாடு 5ஆம் நாள் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் இவ்வுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, முக்கிய உரை நிகழ்த்தினார். திறந்த தன்மையுடைய உலகப் பொருளாதாரத்தை உறுதியாக பேணிகாத்து, வளர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்குவதில் சீனா உறுதியாக ஊன்றி நின்று, ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் வெளிநாட்டுத் திறப்பு நெடுநோக்கு திட்டத்தைப் பின்பற்றும் என்றும், பொருளாதாரத்தின் தொடர்ச்சியான சீரான வளர்ச்சியைத் தூண்டும் சூழலும் ஆற்றலும் சீனாவுக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

நடப்பு உச்சி மாநாட்டின் முதலாவது கட்டக் கூட்டம் 5ஆம் நாள் நடைபெற்றது. உலகப் பொருளாதார நிலைமை, வர்த்தகம், வளர்ச்சி, சர்வதேச நாணய மற்றும் நிதி முறைமை சீர்திருத்தம் முதலியவை தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரை நிகழ்த்தினர்.

20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் கலந்து கொள்வது, இதுவே முதன்முறை. புத்தாக்கம், பிணைப்பு அதிகரிப்பு, நலன்கள் ஒன்றிணைப்பு ஆகியவை கொண்ட உலகப் பொருளாதாரத்தை வளர்க்க பல்வேறு நாடுகள் பாடுபட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். புத்தாகம், உலகப் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கான தேவையாகும். பிணைப்பு அதிகரிப்பு, உலகப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சிக்கான தேவையாகும். நலன்கள் ஒன்றிணைப்பு, உலகப் பொருளாதாரத்தின் சமச்சீரான வளக்ச்சிக்கான தேவையாகும் என்று அவர் தெரிவித்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040