நடப்பு உச்சி மாநாட்டின் முதலாவது கட்டக் கூட்டம் 5ஆம் நாள் நடைபெற்றது. உலகப் பொருளாதார நிலைமை, வர்த்தகம், வளர்ச்சி, சர்வதேச நாணய மற்றும் நிதி முறைமை சீர்திருத்தம் முதலியவை தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரை நிகழ்த்தினர்.
20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் கலந்து கொள்வது, இதுவே முதன்முறை. புத்தாக்கம், பிணைப்பு அதிகரிப்பு, நலன்கள் ஒன்றிணைப்பு ஆகியவை கொண்ட உலகப் பொருளாதாரத்தை வளர்க்க பல்வேறு நாடுகள் பாடுபட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். புத்தாகம், உலகப் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கான தேவையாகும். பிணைப்பு அதிகரிப்பு, உலகப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சிக்கான தேவையாகும். நலன்கள் ஒன்றிணைப்பு, உலகப் பொருளாதாரத்தின் சமச்சீரான வளக்ச்சிக்கான தேவையாகும் என்று அவர் தெரிவித்தார்.