தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சி இன்றைய உலகையே புரட்டிப்போட்டுள்ளது. தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியும், மேம்பாடும் இந்த மாற்றங்களை விரைவாக்கியுள்ளன. பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களுக்கிடையே தொடர்பு, கணினிகளுக்கிடையே தொடர்பு, எலிகளின் மூளைகளுக்கு இடையே தொடர்பு, மனித மூளைக்கும் எலியின் மூளைக்கும் இடையே தொடர்பு என்று தகவல் தொடர்பில் பல்வேறு பரிணாமங்களை ஆய்வின் மூலம் அறிவியலார்கள் உறுதிச் செய்துள்ளனர். தற்போது, இரு மனிதரின் மூளைகளுக்கிடை தகவல் பரிமாற்றம் மேற்கொள்வதில் இரு அறிவியலாளர்கள் வெற்றியடைந்துள்ளனர். இந்த ஆய்வை இந்திய வம்சாவளியை சேர்ந்த அறிவியலாளர் ராஜேஷ் ராவும், அவருடன் பணியாற்றும் ஆன்டிரியா ஸ்டோகோவும் நிறைவேற்றியுள்ளனர்.
இரு மனித மூளைகளிடையில் வலிந்து திணிக்காத வகையிலான தகவல் பரிமாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை உலகிலேயே முதல்முறையாக வெற்றிகரமாக இரு அறிவியலாளாகள் உறுதிச் செய்துளள்னர். இரு மூளைகளுக்கிடையே தொடர்பை உருவாக்குவதற்கு இணைய வசதியை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஒரு மூளையின் மின் செயல்பாடுப் பதிவுகளை இணைய வசதி மூலம் அனுப்பி காந்த அலையை பயன்படுத்தி வழங்கப்படும் தூண்டுதலால் இன்னொரு மூளைக்கு அந்த ஆய்வாளாகள் சமிக்கை அனுப்பி இந்த ஆய்வை வெற்றிகராமாக நிறைவேற்றியுள்ளனர்.
1 2 3 4