சீன அரசவை உறுப்பினர் யாங் ஜேச்சூ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியுடன் 18ஆம் நாள் போஸ்டன் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினார். புதிய ரக சீன-அமெரிக்க உறவை வளர்ப்பது பற்றியும், பொது அக்கறை உள்ள சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகளைப் பற்றியும் அவர்கள் ஆழமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜுன் திங்கள் இருநாட்டு அரசுத் தலைவர்கள் சந்தித்த போது, புதிய ரக சீன-அமெரிக்க உறவை உருவாக்குவது குறித்து முக்கிய ஒத்த கருத்துக்கு வந்துள்ளனர். அதற்குப் பின் இருநாட்டுறவு பல துறைகளில் புதிய முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. சீனாவும் அமெரிக்காவும் தொடர்பை வலுப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். இருநாட்டுறவின் சீரான வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளித்து, உலக மற்றும் பிரதேச அமைதி, நிலைப்புத் தன்மை மற்றும் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்று யாங் ஜேச்சூ கூறினார்.