ஆப்கானிஸ்தான் பிரச்சினையத் தீர்ப்பது பற்றிய சீனாவின் 5 கருத்துக்களைச் லீ க்கெ ச்சியாங் உரைநிகழ்த்தியபோது முன்வைத்தார்.
முதலாவது, ஆப்கானிஸ்தான் மக்கள் தான் நாட்டை நிர்வகிக்க வேண்டும். இரண்டாவது, அரசியல் நல்லிணக்கத்தைத் தூண்ட வேண்டும். மூன்றாவது, பொருளாதாரப் புனரமைப்பை விரைவுப்படுத்த வேண்டும். நான்காவது, வளர்ச்சிப் பாதையை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஐந்தாவது, வெளிநாட்டு ஆதரவை வலுப்படுத்த வேண்டும்.
லீக்கெச்சியாங்கின் இந்த ஐந்து கருத்துகளுக்கு ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர் கானி உடன்பாடு தெரிவித்தார். நீண்டகாலமாக ஆப்கானிஸ்தானுக்கான சீனாவின் உதவி மற்றும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சீனா உள்பட பல்வேறு தரப்பின் ஆதரவுடன், அமைதிப் போக்கை முன்னேற்றிப் பிரதேச வளர்ச்சிக்கு ஆப்கானிஸ்தான் ஆக்கப்பூர்வ பங்காற்றுமென கானி கூறினார்.