அடுத்து, ஸ்வீடன் நாட்டின் காவல்துறையினர் இருவரின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றோம்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலில் காவல்துறையினர் இருவர், துவக்கப் பள்ளி மாணவர் ஒருவரின் தொலைபேசி அழைப்பை ஏற்று, மாணவரின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். கவனமாக பார்த்த பிறகு ஆப்பதான நிலை இல்லை என்பதை அவர்கள் உறுதிச் செய்தனர். ஆனால், இந்தக் குழந்தை தனியாகவே வீட்டில் தங்கியிருந்தார். அதனால், காவல்துறையினர் அங்கேயே தொடர்ந்து தங்கி இக்குழந்தைக்கு துணையாக இருக்க முடிவு செய்தனர். அப்போது, குழந்தைக்கு எழுந்த கணிதவியல் பாடத்தின் சந்தேகங்களுக்கு இருவரின் உதவியுடன் தீர்வு காணப்பட்டது.
தங்களது இந்த அனுபவங்களை இணையதளத்தில் வெளியிட்டு, காவல்துறையினர் பாராட்டுகளைப் பெற்றனர்.