ஜி-20 குழுத் தலைவர்களின் 9ஆவது உச்சிமாநாடு 16ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பென் நகரில் நடைபெற்று வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், உலகப் பொருளாதாரத்தின் இடர்ப்பாடு தடுப்புத் திறமையை வலுப்படுத்துவது குறித்து, சர்வதேச நிதி அமைப்பு முறையில் தொடர்ந்து சீர்திருத்தம் செய்வது, உலகளவில் வரி வசூல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, ஊழல் ஒழிப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிப்பது, வளர்ச்சி தொடர்பான பிரச்சினையில் கவனத்தை அதிகரிப்பது ஆகிய 4 முன்மொழிவுகளை வழங்கினார். எரியாற்றல், சர்வதேச வர்த்தகம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பான விவாதத்தில் அவர் கருத்துக்களைத் தெரிவித்தார்.