சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தம், ஊழல் ஒழிப்புக்கான வலைப்பின்னல் கட்டுமானம், எரியாற்றல் ஒத்துழைப்பு, வர்த்தக பாதுகாப்பு வாத எதிர்ப்பு முதலியவை குறித்து இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் ஒருமித்த கருத்தை எட்டினர். எபோலா நோய் பற்றியும் இக்கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டது. மேலும், 2016ஆம் ஆண்டு ஜி-20 குழுத் தலைவர்களின் உச்சிமாநாடு சீனாவின் ஏற்பாட்டில் நடைபெறும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.