மத பெரியார் சுயு செங்
பெய்ஜிங்கிலுள்ள லோங் ஜுவான் கோயிலிலிருந்து வந்த மத பெரியார் சுயு செங், அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர் ஒருவராக, பொது மக்களின் வாழ்க்கை மற்றும் சமூகத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். இவ்வாண்டின் கூட்டத்தொடரில், தனது கருத்துருவை பற்றிய அவர் கூறுகையில், புத்த மதப் பண்பாடு, மக்களுக்கிடையை உள்ளுணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு உதவி அளிப்பதோடு, நாட்டின் மென் திறனை அதிகரிப்பதற்கும் பங்காற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதனால், தேசிய உற்பத்தி ஆற்றல், வறுமை ஒழிப்பு ஆகியவை தொடர்பாகவும், புத்த மதம் மற்றும் தாவோ மதப் பண்பாட்டின் பரவல் தொடர்பாகவும், தேசிய கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரான நாங்கள், பல பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வருகின்றோம் என்றும் அவர் கூறினார்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் யு செட்ங்ஷெங், நடப்பு மாநாட்டின் தேசிய கமிட்டியின் நிரந்தர கமிட்டிப் பணியறிக்கையை 3-ஆம் நாள் வழங்கினார். அவர் கூறுகையில், 2015-ஆம் ஆண்டில், சமூகத்தின் பல்வாறு வட்டாரங்கள் அரசியல் கலந்தாய்வுப் பணியில் ஈடுபடும் வழிகோல்களை அரசியல் கலந்தாய்வு மாநாடு ஆக்கப்பூர்வமாக அதிகரிக்கும். மேலும், பொது மக்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை வலுப்படுத்துவதன் மூலம், பல்வேறு துறைகளில் பொது மக்களின் கருத்துக்களைப் பயனுள்ள முறையில் வெளியிட வேண்டும் என்று யு செட்ங்ஷெங் தெரிவித்தார்.