• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திருமதி சித்ரா சிவக்குமார் அவர்களின் சி அன் பயணம்-1
  2015-03-12 09:43:50  cri எழுத்தின் அளவு:  A A A   

விதவிதமான உணவுப் பண்டங்கள். கறி வகைகள், காய் வகைகள், பழ வகைகள் என்று பல விதமான தின்பண்டங்கள். அட நம்மூர் தோசை கூட. ஒரு இடத்தில் தோசை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. உடனே சுவைக்கத் தோன்றியது. ஒரு தோசை வேண்டும் என்று சொன்னோம். நம்மூர் அரிசி மாவு போல எதோ ஒன்று. சற்றே மஞ்சள் நிறத்துடன் இருந்தது. பெரிய சட்டியில் மாவினை விட்டு, பெரிய தோசை சுட்டார். அதற்கு மேல் எதோ ஒரு வித திரவியத்தைத் தடவினார். துருவிய காரட், வெள்ளரி, வெங்காயம் தூவினார். பெங்களுரிலிலே ஒரு கடையில் 99 வகை தோசைகள் செய்து விற்கிறார் ஒருவர் என்று கேள்விப்பட்டு, விடுமுறைக்குச் சென்ற போது, அங்கு சென்று வாங்கி உண்டது ஞாபகத்திற்கு வந்தது. தோசை மாவு ஒன்று தான். அதன் மேல் போட்ட பொருட்களைப் பொறுத்து, வௌ;வேறு பெயரிடப்பட்டு, தோசைக் கடையை நன்றாக நடத்தினார் அந்த மனிதர். அதேப் போன்று இங்கு காய் தோசை செய்து கொடுத்தார் அந்தப் பெண்மணி. உண்டு பார்த்த போது நன்றாகவே இருந்தது.

பழரசக் கடைகள். தயிர் கடைகள். நீள நீள குச்சிகளில் கறி வகைகள். இடை இடையே குழந்தைகள் விரும்பி வாங்கும் விளையாட்டுப் பொருட்களின் கடைகளும் இருந்தன. சரி இது தான் நாங்கள் வர வேண்டிய வீதி போலும் என்று எண்ணினோம். உணவு விடுதிகள் ஒன்றையும் காணவில்லையே என்று எண்ணிய நேரத்தில், சாலையின் கடைசியில் நின்றிருந்தோம். இடது புறமாக ஒரு சிறு வீதி. பெரிய நுழைவு விதானம். மக்களின் தலைகளை மட்டுமே காண முடிந்தது. ஆம், அது தான் நாங்கள் பார்க்க வேண்டிய ஹ_ய் மிங் வீதி. முஸ்லிம் கடை வீதி. ஜியே என்றால் சிறு வீதியாம். லு என்றால் பெரிய சாலையாம். அந்த வித்தியாசத்தையும் அன்று நாங்கள் கற்றுக் கொண்டோம்.

வீதிக்கு நுழைவாயிலில் விதானத்தைத் தாண்டி நடக்க மேடை ஒன்று இருந்தது. அதன் மேல் ஏறி நின்றால் முன்னால் நிற்கும் மக்கள் நிறைந்த வீதியைக் காணலாம். அந்த வீதியிலும் நாங்கள் கடந்து வந்த வீதியிலும், கடைகளை நடத்துவோர் முஸ்லிம்கள். வீதியின் பெயர் காரணத்தைப் புரிந்து கொண்டோம். கடை நடத்தும் பெண்கள் அனைவரும் தலையில் அங்கியை அணிந்திருந்தனர். ஆண்கள் பலரும் குல்லாயுடன் இருந்தனர். அன்று கிருஸ்துமஸ் நாளின் முந்தைய இரவு என்பதால், கூட்டமும் அதிகமாகவே இருந்தது. கூடவே ஒரு சந்தேகம் எழுந்தது. இருக்கும் இடமோ மதம் சாரா சீனாவின் ஒரு மாகாணத்தின் தலைநகரில் இருக்கும் முஸ்லிம் வீதியில். தினமோ கிருஸ்துமஸ் நாளின் முந்தைய இரவு. சீனாவில் கிருஸ்துமஸ் விழாவா? பரவாயில்லையே. எம்மதமும் சம்மதமான இடத்தில் இருக்கிறோம் என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

தின்பண்டங்கள், மாமிச உணவுகள், கடலை மிட்டாய் வகைகள், பஞ்சு மிட்டாய் வகைகள், தோபு உணவு வகைகள், உருளைக்கிழங்கு வருவல்கள், வேக வைத்த சக்கரைவள்ளிக் கிழங்கு வகைகள், தயிர் வகைகள், கேக் வகைகள், சீன நூடுல்ஸ் வகைகள், திம்சம் என்று அழைக்கப்படும் நம்மூர் கொழுக்கட்டைகள் என்று வீதியின் இரு மருங்கிலும் எண்ணிறந்த கடைகள். ஒரு ஒரு அடிக்கும் ஒரு கடை. வீதியிலும் கடைகள். வீதிக்கு ஓரத்தின் கட்டிடங்களிலும் கடைகள்.

நம்மூர் திருவிழா வீதியை நினைவிற்குக் கொண்டு வந்தது. கடைகளில் சீ'அன் நகரைப் பற்றி கட்டியங் கூறும் நினைவுப் பொருட்களும்> சீன அலங்காரப் பொருட்களும்> அங்கிகளும்> குளிருக்காகப் பயன்படும் மேல் துணிகளும் இருந்தன. பல உணவு விடுதிகளும் இருந்தன. வழியெல்லாம் விற்ற பண்டங்களில் கண்களுக்கு நன்றாக இருந்த> நாக்கில் எச்சில் ஊற வைத்த> சிலவற்றை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தோம். உருளைக்கிழங்கு வருவல் காரசாரமாக ஜோராக இருந்தது. அதேப் போல் நம்மூர் புட்டைப் போன்று சிறு சிறு மரப் பாண்டங்களில் வேக வைத்து> குச்சியில் அமைத்து> இனிப்பான ஜெல்லி இட்டு கொடுத்தது மற்றொரு சுவையான பண்டம்.

இரவு உணவினை அங்கேயே சாப்பிட்டுச் செல்லவோம் என்று முடிவு செய்து> சற்றே பெரிய விடுதி ஒன்றினைத் தேர்ந்தெடுத்து உள்ளே நுழைந்தோம். நம்மூர்களில் இருப்பது போன்று கடையின் நுழைவாயிலேயே பீத்தா ரொட்டி> நூடுல்ஸ் நிறைந்த பெரிய பெரிய வட்டமான பாத்திரங்களைக் காண முடிந்தது. அதையெல்லாம் கடந்து உள்ளே சென்றோம். விடுதியின் மாடிப் பகுதிக்குச் சென்றோம். அகன்ற விடுதி. மரத்தாலான பென்சுகள். மர நாற்காலிகள். அதிஷ்டவசமாக உணவு அட்டவணையில் ஆங்கிலமும் இருந்தது. அதனால் சாதாரணமாக உண்ணும் கோழிக் கறியும்> காய்கறிகள் மட்டுமே போட்ட கலவைச் சாதமும்> கோழிக்கறி கலவைச் சாதமும் வாங்கினோம். பீத்தா ரொட்டி இட்ட ஆட்டிறைச்சி நூடுலஸ் சீ'அன்னின் சிறப்பு உணவு என்று தோழி சொல்லியிருந்ததால்> அதை உண்டு பார்க்கலாம் என்று அதையும் வாங்கினோம். உணவு சுவையாவே இருந்தது. அங்கிருந்த சீனர்களுடன் எங்களுக்குத் தெரிந்த சீனத்தை பேசிப் பயிற்சி செய்தோம்.

பிறகு மக்கள் கூட்டத்துனூடே நடந்துச் செல்ல ஆரம்பித்தோம். சீ'அன்னின் சிறப்பு கூறும் சில நினைவுப் பொருட்களை வாங்கினோம். தம் பண்டங்களைப் பலரும் கூவிக் கூவி விற்றார்கள். சில இடங்களில் இழையிழையாக நூடுல்ஸ் செய்த காட்டி> வரும் மக்களின் கண்களைக் கவர்ந்தனர். வேர்க்கடலை மிட்டாய் மற்றும் எள்ளு மிட்டாய்கள் செய்ய> பெரிய பெரிய மரத்தாலான சுத்தியல் கொண்டு மாவினை இடிப்பது ஒரு புறம். வீதியின் கடைசிக்கு அப்படியே வந்தோம். அங்கிருந்த சிறு சிறு சிமெண்டு உருளை அமைப்பின் மேல் ஏறி வீதியைப் பார்த்தோம். தலைகளை மட்டுமே காண முடிந்தது. வீதியைப் பார்க்கவே முடியவில்லை. பரவாயில்லை… சீனாவிலும் கிருஸ்துமஸ் விழாவினை உண்டு கழிக்கின்றனர் என்று தெரிந்து கொண்டோம். ஹ_ய் மிங் வீதி எங்களுக்குச் சற்றே வித்தியாசமான வீதியாகத் தெரிந்தது.

வீதியின் முடிவில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் விளக்கினொளியில் பளபளவென்று இருந்தது. அது தான் அவ்வூரின் சிறப்பு மிக்க பறை கோபுரம் என்று அதன் அருகே சென்ற போது தெரிந்தது. அதைப் பார்த்து விட்டு> இரவு 11:00 மணி இருக்கும்> விடுதிக்குத் திரும்ப எத்தனித்தோம். மக்கள் வெள்ளம் அப்போதும் குறையக் காணோம். அதற்கு அங்கு அன்றும் அதற்கு அடுத்த நாளும் விடுமுறை நாளும் கிடையாது.

விடுதிக்குத் திரும்ப நடக்க வேண்டுமா என்று குழந்தைகள் கேட்டதும்> மோதியிலேயே சென்று விடலாம் என்று முடிவு செய்தோம். ஆறு பேர் கொண்ட வண்டியும் இருப்பது அப்போது தான் தெரிந்தது. 30 யுவானுக்கு பேரம் பேசி> ஆறுவரும் ஒரே வண்டியில் ஏறி விடுதிக்குத் திரும்பினோம்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040