சுழல் காற்று அமெரிக்க-மெக்சிகோ எல்லைப் பகுதியைப் பாதித்துள்ளது. மெக்சிகோ பகுதியில் 14 பேர் இதில் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர். 800க்கு மேலான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.
இந்த வார இறுதியில் தெக்சாஸ் மாநிலத்தில் மழை கடுமையாகப் பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு வாரியம் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.