சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 26ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் பான்கிமூன்னைச் சந்தித்துரையாடினார்.
சர்வதேச சமூகம், ஐ.நா நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு பலதரப்புவாதப் பாதையில் ஊன்றிநின்று ஐ.நா சாசனத்தையும் கோட்பாட்டையும் உறுதிப்படுத்தி, உலக அமைதியை பேணிகாத்து, கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.