சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் 26ஆம் நாள் நியூயார்க்கில் வங்கதேசத்தின் தலைமையமைச்சர் ஷேஹ் ஹசினா அம்மையாரைச் சந்தித்துரையாடினார்.
சீனாவும் வங்கதேசமும் சிறந்த அண்டை நாடுகளும், நண்பர்களாகவும் உள்ளனர். வர்த்தகம், உற்பத்தித்திறன் ஒத்துழைப்பு, எரியாற்றல் வளர்ச்சி, அடிப்படை வசதிக் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் வங்காள தேசத்துடன் ஒத்துழைக்க விரும்புவதாக சீனா தெரிவித்தது. தற்போது சீன மக்கள் சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நனவாக்கும் சீனக்கனவுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அதன் முதல் அடியாக ஒரு மண்டலமும் ஒரு பாதையும் என்னும் திட்டப்பணியை முன்வைத்துள்ளனர். வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளும் நண்பர்களும் இந்த வளர்ச்சி வாய்ப்பைக் கூட்டாக பகிர்ந்துகொள்ள சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.