சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், துருக்கியின் அரசுத் தலைவர் ரெசெப் தாயீப் எர்தோயானை உள்ளூர் நேரப்படி நவம்பர் 14ஆம் நாள் அன்தாரியா நகரில் சந்தித்துரையாடினார்.
ஜி20 குழுவின் உச்சி மாநாடு வெற்றி பெறுவது குறித்து, ஷி ச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார். 2016ஆம் ஆண்டின் ஜி20 குழு தலைவர்களின் உச்சி மாநாடு சீனாவில் நடைபெறும். துருக்கியுடன் நெருங்கிய ஒத்துழைப்புகளை நிலைநிறுத்தி, உலகப் பொருளாதாரத் துறையில் ஜி20 குழுவின் பங்குகளை வலுப்படுத்தி, உலகப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.