ரெசெப் தாயீப் எர்தோயான் பேசுகையில், துருக்கியும் சீனாவும், பல்வேறு துறைகளில் நெருங்கிய உயர் நிலை தொடர்புகளை நிலைநிறுத்துவது, ஒன்றுக்கொன்று புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்குத் துணைப் புரியும். சீனாவுடனான உறவுக்குத் துருக்கி பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஒன்றுக்கொன்று மதிப்பு அளிப்பதன் அடிப்படையில், அரசியல், பொருளாதாரம், எரியாற்றல், பண்பாடு, பாதுகாப்பு உள்பட துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்புகளை ஆழமாக்க துருக்கி விரும்புகிறது என்றார் அவர்.
மேலும், இப்பேச்சுவார்த்தையின் போது, பாரிஸ் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, இரு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சர்வதேசச் சமூகம் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பயங்கரவாதத்தைக் கூட்டாக ஒடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.