முக்கியமான கலை நிகழ்ச்சிகளில் கூடும் கூட்டத்தை படம் பிடிக்கவும், கண்காணிக்கவும், இத்தகைய எந்திரங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், தற்போது தேவையற்ற காரணங்களுக்காக இத்தகைய எந்திரங்கள் நெதர்லாந்தில் பயன்படுத்தப்பட்டு வருவதால், அது, விமானப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, அவ்வாறு அனுமதியின்றி வானில் பறக்கும் எந்திரங்களை தடுக்கும் வகையில் கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கு அந்நாட்டு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தின் பிரச்னைகளைச் சமாளிக்க, குறைந்த செலவிலான வழிமுறைகள் என இதனை அவர்கள் அழைத்து வருகின்றனர்
பறவைகளின் பொதுவான இரண்டு அம்சங்கள் என்னவென்றால், அவற்றின் வேகமும், அதன் பலமும்தான் என்று தெரிவிக்கிறார் இத்திட்டத்தின் இணை நிறுவனர் கெய்ஸர். தற்போது பயிற்சி அளவில் உள்ள இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.