கொரிய தீபகற்பம் மற்றும் வட கிழக்காசியாவின் பாதுகாப்பு நிலையில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீனாவும் ரஷியாவும் தொடர்பை மேலும் வலுப்படுத்தி, நம்பகமான பயனுள்ள முறையில் இருநாடுகளின் நலன்களைப் பேணிக்காக்கும் என்று இருதரப்பும் ஒத்த கருத்துக்களை தெரிவித்தன.
தென் கொரியாவில் THAAD எனும் ஏவுகணை எதிர்ப்புத் தொகுதியை பரவல் செய்யும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் நடவடிக்கையில் சீனாவும் ரஷியாவும் பெரும் கவனம் செலுத்தியு வருகின்றன. உலகின் பல்வேறு இடங்களில் ஏவுகணை எதிர்ப்பு தொகுதியை விரிவுபடுத்தி வரும் அமெரிக்காவின் ஆக்கப்பூர்வமற்ற செயல், சர்வதேச மற்றும் பிரதேச சமநிலைக்கும் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இருதரப்பும் குறிப்பிட்டன.