• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தூரிகை பட்டால் பீங்கானும் சிரிக்கும்!
  2016-11-30 10:07:53  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஜியங்சி மாநிலத்தின் நன்ஜங் நகரில் அமைதியாக காட்சி அளிப்பது பீங்கான் ஓவிய அருங்காட்சியகம்.அருங்காட்சியகத்தின் பெயர் தெரியாமல் உள்ளே நுழைய நேரிட்டால், அனைத்து ஓவியங்களும் காகிதங்களில்தான் வரையப்பட்டுள்ளன என்ற முரணான தகவலை மூளைக்கு கண்கள் கடத்தும். அந்த அளவுக்கு, சிறிதளவுகூட வேறுபாடின்றி, பீங்கானில் தத்ரூபமாக ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பீங்கானில் வரைதல் என்றால் ஏதோ, அதில் பூக்கள், இயற்கைக் காட்சிகள் மட்டும் இடம் பெற்றிருக்கும் என்று நினைத்து விட வேண்டாம். செவ்வக வடிவில் பெரிதாக இருக்கும் பீங்கானில் சீனத் தலைவர்கள் முதல் ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை, அவர்களின் உருவங்களை அப்படியே, தூரிகை பிழையின்றி வரைந்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்க்கும்போது, "அடடா" என்று நம்மை அறியாமல் நாக்கின் கூற்று செவிக்கு எட்டும்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040