பலகல்வியியலாளர்களையும்ப லநூல்களையும் உருவாக்கி, சிந்தனையின் வீச்சில் முன்னோடியாக இருந்தகளம் இது. சீனாவின் ஒவ்வொரு கிராமத்தையும் சிறிய மருத்துவமனையுடன் கூடிய மருந்தகம் அலங்கரிக்கும். அதற்கு இக்கிராம்ம் விதிவிலக்கல்ல. இங்கு, பாரம்பரிய மருந்துகள் முதல் மேற்கத்தியமருந்து கள்வரை கிடைக்கிறது. பெரும்பாலும், இக்கிராமமக்கள், தங்களுக்குத் தேவையானசிற்றுண்டிகள் முதல்சாப்பிடும் உணவு வரைதாங்களாகவேதயார் செய்து, தன்னிறைவு என்ற கொள்கையை வெளிப்படுத்துகின்றனர். புத்தர்கோவில்கள், சிறியகிணறுகள், வீடுகளை இணைக்கும் ஒற்றையடிப்பாதை, பறவைகளின்கீதம், வெள்ளந்தியுடன் புன்னகை பூக்களை உதிர்க்கும்மக்கள், தங்களது கடமை 'பணிசெய்துகிடப்பதே'என கழனியில் உழலும்விவசாயிகள் என ஒருகிராமத்துக்கு உண்டானபண்புகளை இழக்காமல் இக்கிராமம்உள்ளது. மேகமந்தைகளை பகலிலும், நட்சத்திரக்கூட்டங்களை இரவிலும் இங்கு காண்பதுமிகஎளிது. நகரவாசிகளுக்கு இல்லாத இந்தகொடுப்பனை இவர்களுக்கு கிடைத்துள்ளது.