2 நாட்கள் நீடிக்கும் 20 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், பிப்ரவரி 16-ஆம் நாள் ஜெர்மனியின் போன் நகரில் துவங்கியது. 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல், அமைதியைப் பாதுகாத்தல், ஆப்பிரிக்காவுடனான உறவை வலுப்படுத்துதல் ஆகிய மூன்று அம்சங்கள் குறித்து, இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும். இவ்வாண்டின் ஜுலை திங்கள் ஹம்பர்க் மாநகரில் நடைபெறும் 20 நாடுகள் குழு உச்சி மாநாடு தொடர்பாக, நடப்பு கூட்டம் ஆயத்தம் மேற்கொண்டது.