முன்னதாக, 2014 ஜூலையில் இந்தியாவில் தனது முதலாவது உற்பத்தி ஆலையை சியௌமி அமைத்தது. இது 2015 ஆக்ஸடில் செயல்பாட்டுக்கு வந்தது. 2016 மார்ச் வரை, இந்தியாவில் விற்கப்பட்ட சியௌமி அலைபேசிகளில், 75 சதவீதம், முதலாவது ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். அமைக்கப்படும் இரண்டாவது ஆலையுடன் இந்த எண்ணிக்கை 95-க்கும் அதிகமான சதவீதம் உயரும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய அலைபேசி சந்தையில் சாம்சங்கை அடுத்து, சியௌமி, 10. 7 விழுக்காடு என்ற நிலையில் உள்ளதாக புள்ளி விபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.