அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 5ஆம் தேதி வெள்ளை மாளிகையில் ஜோர்டன் மன்னருடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். அப்போது டிரம்ப் பேசுகையில், சிரியாவில் அப்பாவி மக்களை இலக்காக கொண்ட வேதி ஆயுதத் தாக்குதல், மனிதகுலத்துக்கே அவமானமானது. இத்தாக்குதலுக்கு அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, சிரியா அரசுத் தலைவர் பஷாரின் மீதான மனப்பான்மையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.