7ஆம் தேதி சிரியா மீது அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தாக்குதல், நாட்டை ஆக்கிரமிக்கும் செயலாகும். இது, சர்வதேச சட்டத்தையும், ஐ.நா சாசனத்தையும் மீறியுள்ளது என்று மூன்று தரப்புகளும் ஒருமனதாகக் கருதுகின்றன. அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் சிரியாவின் இறையாண்மைக்கு மதிப்பளித்து, இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் மூன்று தரப்புகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதேசமயம், 4ஆம் தேதி சிரியாவில் நடத்தப்பட்ட வேதி ஆயுதத் தாக்குதல் குறித்து விசாரி்க்க விசாரணைக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்றும் மூன்று நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன.(ஜெயா)