துருக்கியில் ஆளும் கட்சியான நீதி மற்றும் வளர்ச்சி கட்சி ஆதரவு அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தும் வரைவுத் தீர்மானம், ஏப்ரல் 16-ஆம் நாள் பொது மக்கள் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அந்நாட்டு அரசுத் தலைவர் ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களிடையே உரைநிகழ்த்தியபோது, இந்த வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதம் நடத்துவது, மிக முக்கிய பணியாகும் என்று எர்டோகன் குறிப்பிட்டார்.