பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள புகழ்பெற்ற கடைத்தெருவான சோமப்ஸ் எலிசேயில், நிறுத்தப்பட்டிருந்த காவற்துறை வாகனத்திலுள்ள காவற்துறையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், காவற்துறையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இருவர் கடும் காயமடைந்தனர். காவற்துறையினரை நோக்கிச் சுட்ட பயங்கரவாதியும் சுட்டுக்கொள்ளப்பட்டதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் 20ஆம் நாள் தெரிவித்தது.