அப்போது, ஆடவரைக் குறிக்கும் எழுத்தின் மத்தியப் பகுதியில் மண்வெட்டி போன்ற உருவமும், பெண்ணைக் குறிக்கும் எழுத்தில், மத்தியப் பகுதி கர்ப்பமடைந்த பெண்ணின் வயிறு போன்று குண்டாகவும் இருந்துள்ளது. சில அறிஞர்கள் மது அருந்தி விட்டு போதையில எழுதிய கவிதைகள் எல்லாம் இங்குபாதுகாப்புடன் பேணிக் காக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கும் அதிகமான கல்வெட்டுக்கள், அப்போதைய மாணவர்களுக்கு ஓர் அகராதியாக விளங்கி வந்தது. உறவு முறை, வரலாறு, அறிவியல், தத்துவம் என அனைத்து தகவல்களையும் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.