உலகம் முழுக்க பெரும்பான்மையான மக்களின் பார்வை தற்பொழுது பாரம்பரிய மருத்துவத்தின் பக்கம் திரும்பி இருக்கின்றது. நவீன மருத்துவத்தில் இருந்து மக்கள் பாரம்பரிய மருத்துவம் நோக்கி நகர்வதற்கு பக்க விளைவுகள், மருந்துகளின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உண்டு. இதன் காரணமாக உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்களின் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான ஆய்வினை ஊக்குவித்து வருகின்றன. ஆனால், சீனாவில், பாரம்பரிய மருத்துவத் துறையை ஊக்குவிக்கும் போக்கு என்பது தொடக்கத்தில் இருந்தே எவ்வித தொய்வும் இன்றி நடந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய ஊக்குவிப்பின் காரணமாகவே 2015 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றவர்களுள் பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட சீனப் பெண்மணி டூ யோயோவும் இடம் பெற்றார். இத்தகைய,சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் வளர்ச்சிப் போக்கில் மற்றுமொரு முக்கியத்துவம் உடைய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது ஹேபெய் மாநிலத்தில் உள்ள யீ லிங்க் பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.