சீனாவின் யுன்னான் மாநிலத்தின் மாங் நகரில் மூன்றாவது இமயமலை கடந்த பிரதேச வளர்ச்சிக் கருத்தரங்கு 10ஆம் நாள் துவங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 23 நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள், சீனாவின் 130க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்கள் ஆகியோர், பிரதேசத்துக்குள்ளான உற்பத்தித் திறன் சார் ஒத்துழைப்பு குறித்து ஆராய்ந்து விவாதித்து வருகின்றனர். உற்பத்தித் திறன் சார் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வளர்ச்சி, 2 நாட்கள் தொடரும் இக்கருத்தரங்கின் தலைப்பாகும்.