இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, தேவதையின் திருமணம் இசை நாடகத்தின் ஒரு பகுதியாகும். ச்சி சியன் நியு தேவதையும், துங் யூங் எனும் இளைஞரும் இலவங்க மரத்தின் அடியில் சந்தித்து, காதல் கடலில் மூழ்கி, திருமணம் செய்யும் காட்சியை இப்பகுதி விவரிக்கிறது. சுதந்திரமான காதலில் ச்சி சியன் நியு தேவதையின் ஆசையையும், துங் யூங் இளைஞரின் நேர்மையான பண்பையும் இக்காட்சி வெளிப்படுத்துகிறது.
பண்டைக்காலம் தொட்டு, தேவதையின் திருமணம் என்ற கதை பரவி வந்துள்ளது. கிழக்கு ஹன் வம்சத்தின் இறுதி ஆண்டுகாலத்தில் வு லியாங் சி கல்வெட்டில் இக்கதை செதுக்கப்பட்டது. சிங் வம்சத்தின்போது, சீனாவின் பல பிரதேசங்களின் பாரம்பரிய இசை நாடகங்களில் இக்கதை அரங்கேற்றப்பட்டது. அன்குவெய் மாநிலத்தின் புகழ்பெற்ற நாடகாசிரியர் Lu Hong Fei, மூத்த கலைஞர் Hu Yu Tingகின் வாய் மொழிக்கு இணங்க, தேவதையின் திருமணம் என்ற குவாங்மெய் இசை நாடக கதையை எழுதினார்.