die150116.mp3
|
கடந்த ஜுன் திங்கள் முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இருப்பினும், நவம்பர் 27ஆம் நாள் நடைபெற்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் அமைச்சர் நிலைக் கூட்டத்தில், கச்சா எண்ணெயின் தின உற்பத்தி அளவு 3 கோடி பீப்பாய்களை நிலைநிறுத்துவதென முடிவு எடுக்கப்பட்டது. இதன் விளைவாக, டிசம்பர் திங்களில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து பெருமளவில் குறைந்து வருகிறது. ரஷியா, வெனிசூலா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு இது கெட்ட செய்தி தான். இந்த நாடுகள் குறைவான எண்ணெய் விலையால் கடும் நிதி அழுத்தத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
ரஷியா முதலில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில திங்கள்காலத்தில் ரூபிள் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. எப்போதும் வலிமைமிக்க தோற்றம் அளிக்கும் ரஷிய அரசுத் தலைவர் புதின், 2 ஆண்டுகள் தொடரக்கூடும் பொருளாதார பின்னடைவை ரஷியா எதிர்கொள்ளும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறார். அந்நாட்டின் நிதியமைச்சர் சிலுயனொவ் பேசுகையில்—
"ரூபிள் மாற்று விகிதம் மற்றும் எண்ணெய் விலை தொடர்ந்து தற்போதைய நிலையில் இருந்தால், 2015ஆம் ஆண்டு ரஷியாவுக்கு 50 ஆயிரம் கோடி ரூபிள் இழப்பு ஏற்படும்" என்றார் அவர்.