大年初一:புத்தாண்டில் முதலாவது மாதம், ச்சாங் மாதம் என்றழைக்கப்படுகிறது. ச்சாங் மாதத்தின் முதல் நாளில் மக்கள் ஒருவருக்கும் ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள். இச்செயலை பைய் நியன் என்பார்கள். குழந்தைகள், மூத்தவரிடம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் போது, யா சுய் ச்சியன் என்ற பெயரில் மூத்தவரிடமிருந்து பரிசுப்பணம் பெறுவர். மூத்தவரின் அன்பு இப்பணம் மூலம் காட்டப்படும்.