மங்கோலிய இனத்தின் நீண்ட நாடோடி வாழ்க்கைக் காலத்தில், தனிச்சிறப்புமிக்க விளையாட்டுப் போட்டிகள் தொடக்கப்பட்டு பரவலாக இருந்துள்ளன. மல்யுத்தம்,அம்பு எய்தல், குதிரை ஓட்டம் ஆகியவை மூன்று முக்கிய விளையாட்டுகளாகும். இவை, நதாமு கொண்டாட்ட விழா ஆரம்பித்தபோது முக்கிய அம்சமாகும்.
யுவான் வம்சம் ஆட்சிசெய்த பொழுது, நதாமு, மங்கோலிய புல்வெளியில் பரவலாக காணப்பட்டுள்ளது. இது, படிப்படியாக ராணுவ விளையாட்டு வகையாக மாறியுள்ளது. மங்கோலிய இனத்தின் ஆண்கள் மல்யுத்தம் (குஸ்தி),அம்பு எய்தல், குதிரை ஓட்டம் ஆகிய அடிப்படை திறன்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அப்போதைய ஆட்சியாளர் உத்தரவிட்டார்.
ச்சிங் வம்சம் இருந்தபோது, ஆட்சி அதிகாரம் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்பாடு செய்து நடத்திய கொண்டாட்டமாக நதாமு இருந்தது. பேரூர், வட்டம், மாவட்டம் ஆகிய ஆட்சி நிலையை பிரிவுகளாகக் கொண்டு, முறையே அரையாண்டு, ஓராண்டு மற்றும் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை நடாமு கொண்டாடம் நடைபெறும். இந்த வழக்கப் பழக்கம் இன்றும் தொடர்கிறது.