ஆண்டுதோறும் மங்கோலிய இன மக்கள், நடாமு மாநாட்டை நடத்துவது வழக்கம். தற்போதுள்ள நதாமு மாநாட்டில், மல்யுத்தம், அம்பு எய்தல், குதிரை பந்தயம் ஆகிய விளையாட்டுகளைத் தவிரவும், தடகளம் , குதிரைப்பந்தம், பல்வகை பந்துப் போட்டி போன்றவையும் இடம்பெறுகின்றன. மாநாட்டின்போது, இரவில், பலவகை கலைநிகழ்ச்சிகள் நடந்தேறும். குறிப்பாக, சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் சிலிங்கோல் லீக் பகுதியில் நடைபெறும் நதாமு, பொது மக்கள் அனைவரும் உடல்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காக, பங்கேற்கும் கொண்டாட்டம் ஆகும்.
சுமார் 800 ஆண்டுக்கால வரலாறு உடைய நதாமு, மங்கோலிய இனத்தின் பண்பாட்டைப் பரப்புரை செய்யும் முக்கிய அரங்கம். அது, ஒரு விளையாட்டு விழா மட்டுமல்ல, பாரம்பரிய பண்பாட்டு நிகழ்ச்சியும் ஆகும். மங்கோலிய இனம் உருவாக்கிய நடாமு, சீனா மற்றும் உலகின் விளையாட்டு வரலாற்றை செழுமைப்படுத்துவதற்கு முக்கிய மதிப்பளித்துள்ளது.