ஒன்று, அரசியல் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது, இரண்டு, பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்வது, மூன்று, இரு தரப்பும் மக்களுக்கிடையேயான பரிமாற்றத்தை முன்னேற்றுவது, நான்கு, பிரதேச மற்றும் பல தரப்பு விவகார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகிய முன்மொழிவுகளை ஷிச்சின்பீங் குறிப்பிட்டார்.
டுட்டர்டே பேசுகையில், இந்த பேச்சுவார்த்தை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது, இரு நாட்டுறவை பன்முகங்களிலும் மேம்படுத்தி வளர்த்துள்ளது. இப்பயணம், இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் என்று கூறினார்.