அது மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டின் கோடைக்காலத்தில், கூட்டமான காட்டு வாத்துகள் இங்கு வந்து ஓய்வெடுத்து வாத்துக் குட்டிகளைப் பெறும். நமுசுவோ ஏரியின் அருகில் காட்டெருது, எலி, கரடி முதலிய விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அரிய மிக்க மருந்து செடிகளும் காணப்படுகின்றன.
நமுசுவோ ஏரியின் நான்கு பக்கங்களிலும் நான்கு கோயில்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்களின் சுவரில் இயற்கையாக உருவாகிய புத்தர் ஓவியங்கள் உள்ளன. ஐந்து தீவுகள் பச்சை பசேல் என இருக்கும் ஏரியில் அமைந்துள்ளன. அவை ஐந்தும் புத்தரின் அவதாரம் என பௌத்த மத நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். பௌத்த மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் அவற்றை வணங்குவது கட்டாயம். ட்சா சி துவோ தீபகற்பம் அவற்றில் மிகவும் புகழ் பெற்றது. திபெத் நாட்காட்டியின் ஆடு ஆண்டின் போது, ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்கள் இங்கு வந்து வணங்கிடுவர்.
நமுசுவோ ஏரி லாசா நகரின் வடக்கிலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நமுசுவோ ஏரியில் பயணம் மேற்கொள்ள, ஜூலை முதல் செப்டம்பர் வரை தலைசிறந்த காலமாகும். அங்கு குறைந்தபட்சம் ஒரு இரவு தங்குவது நல்லது. விடியற்காலை மற்றும் மாலை இருளில் நமுசுவோ ஏரியைப் பார்வையிடலாம். ஏரியை ஒரு பட்டமாகச் சுற்றி, சுமார் 280 கிலோமீட்டர் தொலைவு தேவை. பலர் ஏரியை நடந்துச் சுற்றுவதைத் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு நடக்க, சுமார் 7 முதல் 10 நாட்கள் வரை தேவை. இதற்கு முன்பே, லாசா நகரில் பீடபூமியை வழக்கப்படுத்த வேண்டும்.
காரில் ஏரி சுற்றிப் பயணம் மேற்கொண்டால், நல்ல செயற்திறனுடைய கார் தேவை. உள்ளூர் வழிக்காட்டி கொண்டு வருவது நல்லது.