சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பீங் ஏப்ரல் 7ஆம் நாள் ஃபுளோரிடாவில் அமெரிக்க அரசுத்தலைவர் டிரம்புடன் சீன-அமெரிக்க அரசு தலைவர்களிடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தினார். இருதரப்பின் முக்கியத் துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பு, பொது ஆர்வம் கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் ஆகியவை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பு ஆக்கப்பூர்வமானது, சாதனை மிக்கது. இரு தரப்பும் கூட்டாக முயற்சித்து, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பு துறைகளை விரிவாக்கி, ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, கருத்துவேற்றுமையைக் கட்டுப்படுத்தும் வகையில் இருதலைவர்களும் ஒத்த கருத்துக்களை உருவாக்கியுள்ளனர்.