இளைஞரான துதங்தொஜியைப் பொறுத்தவரை, மோசமான வேலை நிலையைக் கூட தாங்கி கொள்ள முடியும். ஆனால், மாற்ற முடியாத காட்சி, ஓட்டுநர் அறையில் காது செவிடாகும் இரைச்சல், களைப்பு முதலியவை மிக பெரிய பிரச்சினைகளாகும். பகலில் புல்வெளியில் புல்களை மட்டும் பார்க்க முடியும். மற்ற எதையும் பார்க்க முடியாது. இரவில் எதுவுமே பார்க்க முடியாமல் 2 தண்டவளங்களை மட்டுமே பார்க்க முடியும்.
இதைச் சமாளிக்க, அவர்கள் இருவரும் ஓட்டுநர் அறையில் பாடி ஆடி ஊக்கமடையப் பாடுபடுகின்றனர். சில சமயம் புகைபிடிக்கின்றனர்.
இரவில் ஓட்டுவது மிக களைப்பானது. நிலையங்களில் நிற்கின்ற போது நாங்கள் சோதனை வேலையை முடித்த பிறகு சிறிது ஓய்வு நேரம் உண்டு. அப்போது நாங்கள் ஆடி பாடுவோம் என்று அவர் கூறினார்.