ஆனால், பழங்களை அப்படியே உண்டால் நிரிழிவுக்கு ஆளாவதை குறைக்க மிகவும் உதவுகிறது. அதிக பழச்சாறுச் சாப்பிடுவது நிரிழிவு உருவாகும் ஆபத்தை அதிகரிப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
ஒரு குவளை பழச்சாறு, ஒரு பழத்துண்டைவிட அதிக சர்க்கரையை கொண்டுள்ளது. பழத்தை நேரிடையாக உண்டும்போது கிடைக்கக்கூடிய நார்சத்து அதனை பழச்சாறாக குடிக்கும்போது கிடைப்பதில்லை. பழச்சாறுகளில் விட்மின்களும், தாதுப் பொருட்களும் உள்ளன. ஆனால், பிற இனிப்பான சாறுகளில் சர்க்கரையை தவிர வேறு எதுவும் இருப்பதில்லை.
இதனை உறுதிச் செய்ய புதிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பொருட்கள் அதிகமாக இருந்த பிறகும், அரை லிட்டர் திராட்சை பழச்சாறை மூன்று மாதங்கள் நாள்தோறும் அருந்தி வந்தவர்களிடம் இன்சுலின் தடுப்பு மற்றும் இடை தசை அதிகரிப்பு காணப்பட்டதை புதிதாக நடத்திய ஆய்வில் அறியவந்துள்ளனர்.