சொந்தமாக தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும், மூதாதையருக்கு மதிப்பளிப்பதும் இந்த இனத்தின் முக்கிய பாரம்பரிய கருத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், Han இனத்தின் பண்பாடு பத்தாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது. நவீனப் பண்பாட்டின் பாதிப்புகளைச் சமாளித்து வளர்கின்ற அதே வேளையில் பண்பாடு மக்களுக்கு ஈடிணையற்ற பங்காற்றிம் உள்ளது. முதலாவதாக, குடும்ப உறவின் மீது Han இன மக்கள் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலை நாடுகளில் மூத்தவரையும் பெயர் சொல்லி நேரடியாக அழைக்கும் வழக்கம் உண்டு. ஆனால், சீனாவிலோ, இளைஞர்கள் அனைவரும் தாத்தா, பாட்டி, மாமா என மதிப்பாக அழைப்பது தான் வழக்கம்.
இரண்டாவதாக, நல்லிணக்க மனித உறவை Han இன மக்கள் எப்போதும் வலியுறுத்தியுள்ளனர்.
பண்டைக்காலம் தொட்டு, Han இன மக்கள் வாழ்ந்து வளர்ந்து வருகின்றனர். அரசியல், ராணுவம், தத்துவம், இலக்கியம் முதலிய துறைகளில், சிறந்த புதுமையான ஒளிவீசும் சாதனைகளை அவர்கள் படைத்துள்ளனர்.